Thursday, July 29, 2010

நான் ஒரு Entrepreneur

'என்ட்ரெப்ரெனர்' (Entrepreneur) என்பவர் யார்?
முதலாளி என்பவர் முதல் அளிப்பவர். தொழிலாளி என்பவர் தொழில் செய்பவர். 'என்ட்ரெப்ரெனர்' (Entrepreneur) என்பவர் யார்?


'என்ட்ரெப்ரெனர்' என்பவர் தன்னையும், தன் நேரத்தையும், யோசனைகளையும், உழைப்பையும் தன் வசம் வைத்திருப்பவர். சமூகத்திற்குப் பயனுள்ள வேலைகள் செய்து பொருளாதார வளர்ச்சிக்கு ஆதாரமாக இருப்பவர். புதிய பாதைகளைக் கண்டுபிடிப்பவர். தொழிலுக்குச் சம்பளம் என்று யோசிக்காதவர். லாபத்தைப் பெருக்கி அதைப் புதிய வழிகளில் எப்படிச் செலவு செய்யலாம் என்று யோசிப்பவர்.

வாழ்க்கையின் தேவைகளால் தளர்ந்து போகாதவரும், வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ளும் வேகம் உள்ளவரும் 'என்ட்ரெப்ரெனர்' ஆகும் வாய்ப்புகள் அதிகம். 1980 களிலும் 90 களிலும் பிறந்தவர்கள் இப்படிப் பிரகாசிக்க வேண்டிய கட்டாயத்தில் இன்று இருக்கிறார்கள்.

இந்த ஆங்கில வார்த்தைக்குத் தமிழ்ப் பதம் இருக்கிறதா? அப்படி இல்லையென்றால் இதைப் பற்றித் தமிழர்கள் பழங்காலத்தில் யோசிக்கவே இல்லையா?

சாம்பார்- படித்ததில் பிடித்தது

எங்கள் வீட்டில் ஒரு குண்டான் சாம்பார் வைத்தாலும் நானும் என் அண்ணனும் ஒரெய் சிட்டிங்கில் காலி பண்ணிடுவோம் அதே போல்  

சாம்பாரில் 
வெடி சாம்பார்,
திடீர் சாம்பார்,
மிளகு சாம்பார் - என பலவகை உண்டு.

பால்ய வயதில்
சாம்பார் என்றால் அவ்வளவு இஷ்டம்
கூடுதலாய் நாலுவாய் சோறு
உள்ளே இறங்கும் - அதனாலேயே
வாரத்திற்கு இரண்டு முறை சாம்பார்.

அக்கா, அத்தை, அம்மா
சமைக்கிற சாம்பார்களில்
அம்மா வைக்கும் 'சாம்பார்'
அலாதியானது.
கொஞ்சூண்டு காய்கறி போட்டாலும்
அம்மாவின் கைப்பக்குவத்தில்
மணக்க மணக்க சாம்பார் தயார்.

மூன்று ஷிப்டுகளிலும்
மாறி, மாறி
கேண்டினில் சாம்பார்.
அப்பாவுக்கு அதனாலேயே
'சாம்பார்' என்றாலே அலார்ஜி.

ஜெமினிகணேசனை
'சாம்பார்' என்பார்களே!
பிடித்ததினாலா!
பிடிக்காமல் போனதினாலா!

எத்தனை முறை நான்
சாம்பார் வைத்தாலும் - ஒவ்வொரு முறை
ஒவ்வொரு சுவை வருகிறது.

'சாம்பாரில் நீ எக்ஸ்பர்ட் ஆயிட்டடா?'
புகழ்கிறார்கள் நண்பர்கள்.

இப்பொழுதெல்லாம்
எங்கள் ஏரியாவில் கையேந்திபவன்களில்
'சாம்பார்' என்ற பெயரில்
ரசம் போல தரும் சாம்பார் கூட
தருவதில்லை.
இரண்டு வகை சட்னி மட்டும்தான்!
அல்லது சேர்வை மட்டும் தான்!
'சாம்பார்' பணக்காரர்களின்
உண்வாகிவிட்டது.

'பாழாய் போன
கருணாநிதியால் தான் இப்படி?
எம்ஜிஆர் இருந்தால்
இப்படி நடக்க விட்டிருப்பாரா?'
புலம்புகிறார் பக்கத்துவீட்டு
வயதான தாய்க்குலம்.

சாம்பாருக்காவது
விலைவாசியை எதிர்த்து...
தெருவில் இறங்கி போராடலாம்
என தயாராய் இருக்கிறேன்.

உங்களுக்கும் சாம்பார்
பிடிக்கும் தானே!